sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதியை தாக்கிய சக கைதிகள் 4 பேர் சேலத்துக்கு இடமாற்றம்

/

கைதியை தாக்கிய சக கைதிகள் 4 பேர் சேலத்துக்கு இடமாற்றம்

கைதியை தாக்கிய சக கைதிகள் 4 பேர் சேலத்துக்கு இடமாற்றம்

கைதியை தாக்கிய சக கைதிகள் 4 பேர் சேலத்துக்கு இடமாற்றம்


ADDED : நவ 13, 2024 03:30 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:மேட்டூரை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 29. போதைப்பொருள் வழக்கில் கைதாகி, ஆத்துார் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த ஆசிக் அலி, கார்த்தி, சதீஷ், சூர்யா, ரவிச்சந்திரன் ஆகியோர் கைதாகி, ஆத்துார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள், யோகேஸ்வரன் ஆகியோர், நேற்று முன்தினம், சிறையில் கேரம் விளையாடினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், 5 பேரும் சேர்ந்து யோகேஸ்வரனை தாக்கினர். காயம் அடைந்த அவருக்கு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையறிந்த கண்காணிப்பாளர் வினோத், ஆத்துார் சிறையில் விசாரித்தார். பின், 5 பேரும், அவர்களது உறவினர்களை பார்க்க, 3 மாதங்கள் தடை விதித்தார். மேலும் கார்த்தி, சதீஷ், சூர்யா, ரவிச்சந்திரன் ஆகியோரை, சேலம் மத்திய சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார். தவிர, 5 பேர் மீதும் அளித்த புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us