ADDED : ஜூன் 10, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்:தாரமங்கலம்,
மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி சீனி,
39. இவர் வீடு வாசலில் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து
துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு சீனி வீட்டின்
ஜன்னல் மீதிருந்த மொபைல் போனை மர்ம நபர் திருடிக்கொண்டார்.
இந்நிலையில்
சீனி எழுந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 4 பவுன்
சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து சீனி
புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
