/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி
/
இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி
ADDED : டிச 06, 2025 06:12 AM
சேலம்: 'டிட்வா' புயலால், சேலம் மாவட்டத்தில் கடந்த, 29ல் ஒத்தி-வைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, இன்று நடக்கி-றது. 19 மையங்களில், காலை, 10:00 முதல், மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது. ஊரக பகுதிகளில் அரசு அங்கீ-காரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாண-வியர், 4,373 பேர் இத்தேர்வை
எழுதுகின்றனர்.
அதில், சேலம் கல்வி மாவட்டத்தில், 11 மையங்களில், 2,229 பேர், சங்ககிரி கல்வி மாவட்டத்தில், 8 மையங்களில், 2,144 பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், பிளஸ் 2 படிக்கும் வரை, 4 ஆண்டுக்கு தொடர்ந்து வழங்கப்-படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

