ADDED : அக் 18, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 20, கருமலைக்கூடல் கோவிந்தாயி, 63, லட்சுமி, 63, ராஜேஸ்வரி, 65 ஆகியோர், நேற்று காலை கருமலைக்கூடலில் நடந்து சென்றனர்.
அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒரு தெருநாய், 4 பேரையும் கடித்தது. காயம் அடைந்த, 4 பேரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். அதே நாய் கடித்த மேலும் ஒருவர், கோம்புரான்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.