தாரமங்கலம்; தாரமங்கலம், 27வது வார்டு கொரவன்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 60. இவர் ஆடுகளை வளர்த்து விற்று வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ந்து விட்டு, இரவு வீட்டின் அருகே பட்டியில் அடைத்து விட்டு துாங்க சென்றார். நள்-ளிரவு 2:00 மணியளவில் ஆடுகள் சத்தம் கேட்டு பழனிசாமி வெளியே வந்தார். அப்போது, ஆடு-களை மர்ம விலங்கு கடிப்பதை பார்த்து துரத்தி-யுள்ளார். அதன்பின் பார்த்தபோது பட்டியில் இருந்த, 5 ஆடுகள் இறந்தும், ஒரு ஆடு குடல் சரிந்து உயிருடன் இருந்துள்ளது. மற்ற 5 ஆடுகள் படுகாயங் களுடன் இருந்தது.
நேற்று காலை வருவாய் துறையினர் மற்றும் தாரமங்கலம் கால்நடை மருத்துவர், இறந்த ஆடு-களை பரிசோதித்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். அடிக்கடி ஆடுகளை மர்ம விலங்கு கடிப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

