sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஆக 19, 2025 01:40 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் வழியாக ரயிலில் கேரளாவிற்கு கடத்திய, 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வருபவர்களை, ரயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, சேலம் ரயில்வே போலீசார் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், பொம்மிடியில் இருந்து சேலம் வரை சோதனை நடத்தினர்.

அப்போது பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில், கழிவறை அருகே ஒரு பேக் கேட்பாரற்று கிடந்தது. அதனை திறந்த பார்த்த போது, பிளாஸ்டிக் பண்டல்களில், 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து தகவல் இல்லாததால், யார் கடத்தியது என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து 6 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து, சேலம் வழியாக கேரளா சென்ற ரயில்களில் போலீசார் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us