ADDED : மார் 02, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்; 'ஏன்சியன்ட் சோட்டாகான் கராத்தே - டோ' சங்கம் சார்பில், ஓமலுார் தங்கம் மண்டபத்தில், மாநில கராத்தே போட்டி நேற்று நடந்தது.
பொதுச்செயலர் சிவபெருமாள் தலைமை வகித்தார். அதில், 5 முதல், 18 வயதுள்ள பள்ளி மாணவ, மாணவியர், சேலம், கோவை, வேலுார், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, 8 மாவட்-டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனை என, 600 பேர் பங்கேற்றனர். சண்டை, செய்முறை பிரிவுகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

