தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆவணம் இன்றி இயக்கிய 7 வாகனங்கள் பறிமுதல்

ஆவணம் இன்றி இயக்கிய 7 வாகனங்கள் பறிமுதல்

ஆவணம் இன்றி இயக்கிய 7 வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 24, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு: சேலம் கிழக்கு ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமையில், போக்கு-வரத்து துறை அதிகாரிகள் ஏற்காட்டில், நேற்று வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர்.

ஏற்காட்டில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் சாலை, படகு இல்ல சாலை மற்றும் பிரதான சாலைகளில் தணிக்-கையில் ஈடுபட்டனர்.ஓட்டுனர் உரிமம், காப்பீடு, தகுதிச் சான்று மற்றும் புகை சான்று உள்ளிட்ட முறையான ஆவணங்கள் ஏதுமின்றி இயக்கப்பட்ட, 2 ஆட்டோ, பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும், 2 வேன்கள், 2 சரக்கு வாகனங்கள் மற்றும் 1 ஜே.சி.பி., இயந்திரம் என மொத்தம், 7 வாகனங்களை ஆர்.டி.ஓ., தலைமையிலான குழு-வினர் பறிமுதல் செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் விதிகளை மீறி சீட் பெல்ட் அணியாமல் சென்ற, 5 நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கும், ஹெல்மெட் அணி-யாமல் ஆபத்தான முறையில் பயணித்த, 10 இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில், 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us