/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு
/
வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு
ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி, 27. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குழந்தைபாண்டியனுக்கும் நிலப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த, 2ல் தாரமங்கலம் ஏரி பகுதியில் சென்ற குப்புசாமியை, குழந்தைபாண்டியன் திட்டி, பீர் பாட்டிலால் தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
குப்புசாமி ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.