/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதையில் கிணற்றில் குளித்த தொழிலாளி பலி
/
போதையில் கிணற்றில் குளித்த தொழிலாளி பலி
ADDED : செப் 26, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஜலகண்டாபுரம், வண்டிமேடு கிழக்கு ஆலமர தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 28. இவர் ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை நடத்தி வந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, நண்பர்களுடன் பொடையன்தெரு மாரியம்மன் கோவில் கிணறு அருகே மது அருந்தினார்.
தொடர்ந்து ராஜ்குமார் கிணற்றில் குளித்து விளையாடினார். அப்போது மூழ்கிவிட்டார். நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராஜ்குமாரை சடலமாக மீட்டனர். ஜலகண்டாபுரம்
போலீசார் விசாரிக்கின்றனர்.

