sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தவறான ஊசி செலுத்தி நோயாளி மரணமா விசாரணை நடத்த 3 பேர் குழு அமைப்பு

/

தவறான ஊசி செலுத்தி நோயாளி மரணமா விசாரணை நடத்த 3 பேர் குழு அமைப்பு

தவறான ஊசி செலுத்தி நோயாளி மரணமா விசாரணை நடத்த 3 பேர் குழு அமைப்பு

தவறான ஊசி செலுத்தி நோயாளி மரணமா விசாரணை நடத்த 3 பேர் குழு அமைப்பு


ADDED : பிப் 01, 2025 02:32 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் ஒருவர் உயிரிழந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை ஆண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலருக்கு, நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த மருத்துவர் ஊசி போட்டார். உடனே ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் நடுக்கம் உண்டானது.

உடனடியாக, டீன் தேவி மீனாள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், பாதிக்கப்பட்ட ஏழு நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். மருத்துவமனை போலீசார் விசாரித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மங்களபுரத்தை சேர்ந்த வேணுகோபால், 40, தர்மபுரி மாவட்டம், நாகலுார் மனோஜ், 18, சேலம் மாவட்டம், வாழப்பாடி முருகேசன், 54, ஓமலுார், காமலாபுரம் அன்பழகன், 60, மனோகரன், 64, ரமேஷ், 48, ராஜூ ராம், 27, என, தெரிந்தது. இதில், வேணுகோபால், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.

மருத்துவர்கள் கூறியதாவது:

'செபோபெராசோன் சல்பாக்டாம்' எனும் மருந்து ஊசி செலுத்தப்பட்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்மறை கிருமிகளுக்கு எதிராக செயல்படும். பக்கவிளைவும் ஏற்படுத்தும். குமட்டல், வயிற்றுப்போக்கு, உடல் நடுக்கம், ஊசி செலுத்திய இடத்தில் வலி உள்ளிட்ட ஒவ்வாமை சில நேரங்களில்

ஏற்பட்டு, கல்லீரல் என்சைம், ரத்த எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, வேணுகோபால் இறந்திருக்கலாம்.

ஒவ்வாமை ஏற்படுமா என்பதை பரிசோதித்துவிட்டு ஊசி செலுத்தினால் பக்கவிளைவு வராமல் இருக்கும். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து, நான்கு மாதங்களே ஆன நிலையில், வயிறு பிரச்னைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மற்றொருவர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோயால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று ஒவ்வொரு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்தை செலுத்தினரா என்ற சந்தேகம் உள்ளது.

வேணுகோபால் இறந்த பின், உறவினர்களை அழைத்து, இரவோடு, இரவாக உடலை அனுப்பியதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

டீன் தேவி மீனாள் கூறுகையில், ''இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஆறு பேர் தீவிர சிகிச்சைபிரிவில் நல்ல நிலையில் உள்ளனர்.

இதுதொடர்பாக விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விசாரித்து அறிக்கை அளித்ததும், மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். தமிழக மருத்துவ பணி கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற அரசு மருத்துவமனைகளில் இந்த ஊசி செலுத்தப்பட்டதால் ஏதும் பாதிப்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us