/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாதை மாறி சென்ற பொக்லைன் தம்பதி உயிரை பறித்தது
/
பாதை மாறி சென்ற பொக்லைன் தம்பதி உயிரை பறித்தது
ADDED : அக் 27, 2025 11:54 PM
ஓமலுார்: ஒருவழிப்பாதையில் விதிமீறி வந்த பொக்லைன் வாகனம் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கணவன் - மனைவி பலியாகினர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், 40; கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி பார்வதி, 36. தர்மபுரி மாவட்டம், பாளையம்புதுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, முருகன், பார்வதி நேற்று காலை, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் தலைக்கவசம் அணியாமல் சென்றனர்.
காலை, 6:15 மணியளவில் தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடுகுளி அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தொப்பூரிலிருந்து எதிர்திசையில், ஒருவழிப்பாதையில் விதிமீறி வந்த பொக்லைன் வாகனம், எதிர்பாராமல் பைக் மீது மோதியது. இதில், தம்பதி துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீவட்டிப்பட்டி போலீசார், பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

