/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி
/
'போதை'யால் ஓடையில் விழுந்த வாலிபர் பலி
ADDED : டிச 16, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அம்மாபேட்டை வையாபுரி தெருவை சேர்ந்த பொற்-செல்வன் மகன் தங்கமணி, 22. இவர் உடையாப்பட்டியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, உடையாப்பட்டி பெருமாள் கோவில் ஓடை அருகே நண்-பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
போதை அதிகமான நிலையில், அங்கிருந்த ஓடையில் தங்கமணி தவறி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்-துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்-கின்றனர்.