sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கில் சென்ற வாலிபர் சாக்கடையில் விழுந்து பலி

/

பைக்கில் சென்ற வாலிபர் சாக்கடையில் விழுந்து பலி

பைக்கில் சென்ற வாலிபர் சாக்கடையில் விழுந்து பலி

பைக்கில் சென்ற வாலிபர் சாக்கடையில் விழுந்து பலி


ADDED : ஜூன் 17, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, பூலாம்பட்டி அருகே, மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர், சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபாகரன், 24, விவசாய கூலி வேலை செய்து வந்தார். பிரபாகரனும், பூலாம்பட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் கேரள மாநிலம், வல்லக்கடை பகுதியை சேர்ந்த விமல் வில்லீசன், 22, என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு சொந்த வேலையாக சித்துார் சென்றுவிட்டு, பூலாம்பட்டிக்கு யமஹா மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் பைக்கை ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் பிரபாகரன் ஓட்டியுள்ளார். பைக்கின் பின்னால் விமல் வில்லீசன் அமர்ந்துள்ளார். பூலாம்பட்டி அருகே கள்ளர்பட்டி பகுதி வளைவில் திரும்பும்போது, பைக் கீழே விழுந்துள்ளது. அப்போது, பிரபாகரன் சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து, பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். படுகாயங்களுடன் விமல் வில்லீசன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us