sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை

/

பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை

பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை

பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை


ADDED : ஜூன் 30, 2024 03:38 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பல வகை தானியங்களை விதைத்து உரமாக்கும் தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு

கூறியதாவது:

ஒரு வயலில் ஒரே நேரத்தில், 7க்கும் மேற்பட்ட விதைகளை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்வதால் மண் வளம் பெருகும். தானியங்களில், 2 வகை; எண்ணெய் வித்துகளில், 2 வகை; பயறு வகைகளில், 2 வகை; பசுந்தாள் வகை ஒன்று ஆகிய ஒவ்வொன்றும், 1 கிலோ வீதம், 7 கிலோ விதை, ஒரு ஏக்கருக்கு போதும்.

குறிப்பாக எள், சோளம், ஆமணக்கு, தட்டைப்பயிர், அகத்தி, கொள்ளு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, பச்சைப்பயிர், தினை, பனிவரகு, சாமை, மக்காச்சோளம் போன்றவை உகந்தவை. பல வகை பயிர்களை விதைத்து அவற்றை மடக்கி உழவு செய்து, அடுத்த பயிருக்கு உரமாக்குவது சிறந்த தொழில்நுட்பம். இதன்மூலம் மண் வளம் மேம்படுவதோடு, அடுத்த பயிருக்கு தேவையான சத்துகள் எளிதில் கிடைப்பதால் பயிர்கள் வளர்ச்சி அதிகரித்து, கூடுதல் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us