sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை

/

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை


ADDED : அக் 10, 2025 03:32 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் தனியார் பள்ளியில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு வரும், 12ல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில், 38 மையங்களில், 668 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில், 13,113 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களில், 187 மாற்றுத்திறனாளிகள், சொல்வதை எழுதுபவர் துணையுடன், 35 பேர் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பணி நாடுனர்களுக்கான அறிவுரைகள், அவர்களுக்கான அனுமதி சீட்டில் வழங்கப்பட்டுள்ளது. காலை, 9:30 மணிக்கு மேல் வருகை புரியும் தேர்வர்கள் அனுமிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வை கண்காணிக்க, 38 முதன்மை கண்காணிப்பாளர்கள், 38 துறை அலுவலர்கள், 668 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகின்ற முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வை நேர்மையாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினார்.

முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, ஆதி திராவிட நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us