sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

/

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : மே 01, 2024 01:42 PM

Google News

ADDED : மே 01, 2024 01:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயறு வகை பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:

பயறு பகை பயிர்களை, வறட்சியை தாங்கி வளர விதைக்கும் முன் விதைகளை கடினப்படுத்துவது அவசியமாகிறது. ஒரு லிட்டர் நீரில், 100 கிராம் 'ஜிங்க் சல்பேட்' உப்பை கரைத்து அதில், 350 மி.லி., நீரில் ஒரு கிலோ துவரை விதையை, 3:00 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் உலர்த்தி காய வைத்து விதைக்க வேண்டும்.

அதேபோல், 100 கிராம் 'மாங்கனீஸ் சல்பேட்' உப்பு, ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதில் ஒரு கிலோ எடுத்து, பாசி பயறு விதையை, 3:00 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி காய வைத்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான உளுந்து விதையை, 300 கிராம் 'ஜிங்க் சல்பேட்', 300 கிராம் மாங்கனீஸ் சப்பேட்', 3 லிட்டர் நீரில் கரைத்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி காய வைத்து கடினப்படுத்தி விதைப்பதால் கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயறு வகை பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி அதிக லாபம் பெற விவசாயிகள் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us