/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெறுவது உறுதி
/
ஏற்காடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெறுவது உறுதி
ஏற்காடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெறுவது உறுதி
ஏற்காடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெறுவது உறுதி
ADDED : ஆக 26, 2025 01:15 AM
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலர் மெடிக்கல் ராஜா (எ) ராஜசேகரன் தலைமையில் நேற்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியில், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. இதை தி.மு.க.,வினருக்கு சவாலாக சொல்கிறேன். வரும் தேர்தலில் பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெற்றி பெற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, அ.தி.மு.க., ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் கூறி, உணர்வோடு பணியாற்ற வேண்டும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், இ.பி.எஸ்., செல்லும் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா,
எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலர் அருண்குமார், அம்மா பேரவை மாவட்ட இணை செயலர் ஹரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலர் பழனிவேல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் ராஜராஜசோழன், மாவட்ட மகளிர் அணி இணை செயலர் அமுதா, ஒன்றிய அவைத் தலைவர் ரவி, மாவட்ட விவசாய அணி இணை செயலர் முத்துசாமி, துணை செயலர் ராஜகேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

