sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

/

'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'

'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'


ADDED : அக் 14, 2025 07:18 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுாரில், அ.தி.மு.க., சார்பில் டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் பழனிவேலு வரவேற்றார். பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் கோட்டையாக வீரபாண்டி உள்ளது. யாரும் அசைத்து பார்க்க முடியாத வகையில் கட்சி நடத்தி வருகிறோம். ஓரணி, ஸ்டாலின் அணி என, எந்த அணியும் செல்லுபடியாகாது. இ.பி.எஸ்., அணியே வெல்லும். சேலத்துக்கு 5 பொறுப்பு அமைச்சர்கள் வந்துட்டாங்க. எத்தனை பேர் வந்தாலும் வீரபாண்டி உள்பட, 11 தொகுதியிலும் அ.தி.மு.க.,வெற்றி பெறும்.இவ்வாறு பேசினார்.

வீரபாண்டி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ராஜமுத்து பேசுகையில்,'' மல்லுாரில் கால்நடை மருந்தகத்தை சுற்றி, ஆறு மாதமாக தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவில்லை. மல்லுாரில், 5 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வார்டில் எந்த வேலையும் செய்யவில்லை. தி.மு.க.,வார்டில் வேலை செய்கின்றனர். தி.மு.க.,ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது,'' என்றார்.

அ.தி.மு.க.,அமைப்பு செயலர் செம்மலை, தி.மு.க., அரசை கண்டித்து பேசினார். மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, துணைத்தலைவர் சித்துராஜ், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்னதம்பி, ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார், அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us