sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை சுகவனேஸ்வரர் கோவிலில் அறிவிப்பு

/

கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை சுகவனேஸ்வரர் கோவிலில் அறிவிப்பு

கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை சுகவனேஸ்வரர் கோவிலில் அறிவிப்பு

கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை சுகவனேஸ்வரர் கோவிலில் அறிவிப்பு


ADDED : நவ 11, 2025 06:46 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சிவன் கோவிலுக்குள், 'கைலாய வாத்தியங்கள்' வாசிப்பதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வாசிக்க தடை செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.சேலம் நகரின் மையப்பகுதியில், திருமணிமுத்தாற்றின் கரையில் பழமையான சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சேலத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில், ஆறு கால பூஜை மற்றும் இரவு பள்ளியறை பூஜையின்போது, பக்-தர்களால் 'கைலாய வாத்தியங்கள்' இசைக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன், கோவில் நிர்வாகம் சார்பில் அறி-விப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், 'கோவிலில் பூஜைகள், வழிபாடுகள் நடக்கும் போது சமீப காலமாக ஒரு சிலர் கைலாய வாத்தியங்களை அதிக ஒலியுடன் வாசிக்கின்றனர். இது பக்தர்க-ளுக்கும், பூஜை வழிபாட்டுக்கும் இடையூறாக உள்ளதால், கோவி-லுக்குள் கைலாய வாத்தியங்கள் வாசிக்க தடை செய்யப்பட்டு. கோவில் முன்புறம் நாலுகால் மண்டபம் அருகே, கைலாய வாத்-தியங்களை மங்கல வாத்தியங்களுக்கு இடையூறு இன்றி வாசிக்-கலாம்' என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்-டுள்ளது.சிவ பெருமானுக்கு உகந்த கைலாய வாத்தியங்களை, கோவி-லுக்குள் இசைக்க தடை விதித்திருப்பது, சிவ பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவிலில் மகா மண்-டபம் முன்பே தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக அர்த்த மண்டபத்தில் இருந்து, சுவாமி தரிசனத்து அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்று தரிசனம் செய்ய தற்போது சிறப்பு கட்டணம், 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், மூலவரை அருகில் நின்று தரி-சனம் செய்ய கட்டணம் வசூலிப்பதுதான் நடைமுறை. ஆனால், தற்போது சாதாரண நாட்களிலும் அர்த்த மண்டபத்தில் நின்று, சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூல் செய்வது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.






      Dinamalar
      Follow us