/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு கடை வைக்க உரிமம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
/
பட்டாசு கடை வைக்க உரிமம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடை வைக்க உரிமம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடை வைக்க உரிமம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 15, 2025 01:02 AM
சேலம், சேலம் மாநகரில், தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்., 20ல் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற, ஜூலை 16 முதல், 31 வரை கமிஷனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்ட விண்ணப்பம், உரிமைக்கட்டணம் ரூ.1,000 செலுத்தியதற்கான இ-சலான், பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தில் 5 அசல் வரைபடம், சொந்த கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீது, வாடகை கட்டடமாக இருப்பின், கட்டட உரிமையாளரின் சம்மத கடிதம், மாநகராட்சி உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, விண்ணப்பதாரரின் 3 புகைப்படம் உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.
தற்காலிக பட்டாசுகடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 சதுர மீட்டருக்கு பரப்பு இருக்க வேண்டும். ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்க இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.