ADDED : ஆக 21, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், 'தீன்தயாள் உபாத்யாயா' திட்ட நிதியை முறையாக பயன்படுத்தவில்லை; உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை சரியாக வழங்கவில்லை எனக்கூறி, 13 மாண-வர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சென்னையில் உள்ள தாழ்த்தப்பட்ட நல ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநகர போலீஸ் துறைக்கு, ஆணையம் உத்தரவிட்டது. இதனால், 13 மாணவர்களும், சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் அலுவ-லகம் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க, நிலவழகனுக்கு ஆணையம் உத்தர-விட்டது. அதன்படி நேற்று முன்தினம், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஆஜரான நிலவழகன், அங்கு கேட்கப்பட்ட கேள்-விகளுக்கு உரிய விளக்கம் அளித்தார்.

