sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

/

நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி


ADDED : டிச 30, 2025 01:28 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி வெள்ளையப்பன், 67. இவர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், 11 பேருடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.

தொடர்ந்து, அவர், அவருடன் வந்த காவியாஞ்சலி, 25, கலா, 30, பேத்தி காவியா என, 4 பேர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கு-ளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்-களை தடுத்து மீட்டு முதலுதவி அளித்தனர்.

பின் அவர்கள் கூறியதாவது: வெள்ளையப்பனுக்கு பாத்தியப்-பட்ட நிலத்தில் விவசாயம் செய்கிறோம். அவரது உறவினர்கள், பாகப்பிரிவினையின்போது கூடுதல் நிலம் கேட்டு பிரச்னை செய்-வதோடு, ஒரு பகுதி நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இதுதொடர்பாக நடந்த தகராறில், வெள்ளையப்பனின் மகன் மணிகண்டன், 30, தாக்கப்பட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் உள்ளார். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us