ADDED : மார் 03, 2026 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ் அணி பா.ம.க., சேலம் வடக்கு மாவட்ட சமூக ஊடக பேரவை செயலர் சபரி, 32. இவரது வீட்டில் நேற்று முன்-தினம் இரவு, 8:45 மணிக்கு புகுந்த, 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சபரியை சரமாரியாக தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.
வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், மர்ம கும்பலை தேடுகின்றனர். காயமடைந்த சபரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்-றனர்.

