/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் குழந்தைகளை காக்க விழிப்புணர்வு ஊர்வலம்
/
பெண் குழந்தைகளை காக்க விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 21, 2024 01:28 AM
சேலம், டிச. 21-
'பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம்' திட்டம், மத்திய அரசால், 2015ல் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் பாலின பாகுபாட்டை நீக்கி, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., மேனகா, தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் புறப்பட்ட ஊர்வலம், திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை வழியே மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தின்போது, வரதட்சணை எதிர்ப்பு, பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகள் மற்றும் பெண்களின் உதவி எண்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த ஊர்வலத்தில், மாவட்ட சமூகநல அலுவலர் கார்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் சுந்தரி, அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் வரதட்சணை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.