sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நா.த.க., மாநகர் செயலர் விலகல் தலைமை மீது 'பகீர்' குற்றச்சாட்டு

/

நா.த.க., மாநகர் செயலர் விலகல் தலைமை மீது 'பகீர்' குற்றச்சாட்டு

நா.த.க., மாநகர் செயலர் விலகல் தலைமை மீது 'பகீர்' குற்றச்சாட்டு

நா.த.க., மாநகர் செயலர் விலகல் தலைமை மீது 'பகீர்' குற்றச்சாட்டு


ADDED : நவ 19, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலர் அழகாபுரம் தங்கம், 41. இவர், கட்சி பதவி மற்றும் கட்சியில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வதாக, சமூக வலை தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில், இதுநாள் வரை என்னோடு உடனிருந்து ஒத்து-ழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தலைவரின் வழியில், 'தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்' என, குறிப்பிட்-டுள்ளார்.இதுபற்றி அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

கட்சி தொடங்கியது முதல், 15 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறேன். எனக்கு கட்சி செயல்பாட்டில் திருப்தி இல்லை. ஆட்-சிக்கு வரும் திட்டம், கட்சி தலைமையிடம் இல்லை என்பதால், பதவி விலகுகிறேன். கடந்தாண்டு செப்.,மாதம் சேலம் வந்த-போது, 100 பூத்தை, ஒரு தொகுதியாக பிரித்து பட்டியல் தர சொன்னார். அதன்பின், 50 பூத், 25 பூத்தாக குறைத்து, பட்டியல் தயார் செய்த உத்தரவு வந்தது. இந்த நடவடிக்கை கட்சியை உடைப்பதற்கான முயற்சியே தவிர வேறில்லை. 25 பூத் கொண்ட ஒரு தொகுதியில் இருந்து மாதம், 1,000 ரூபாய் கட்சி நிதியாக வசூலிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. விரைவில் பத்திரி-கையாளர்களை சந்தித்து, கட்சியில் இருந்து விலகியதற்கான கார-ணத்தை தெளிவாக எடுத்துரைப்பேன்.இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us