ADDED : நவ 05, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
பனமரத்துப்பட்டி, நவ. 5-
சந்தியூர், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்ட அறிக்கை:
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு, நாளை, நாளை மறுநாள் (7ம் தேதி) நடக்கிறது. இதில் பங்கேற்க, தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். கட்டணம் இல்லை. இரு நாட்கள் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் சான்றிதழ் கிடைக்கும். மதிய உணவு வழங்கப்படும்.
ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் கொண்டு வரவேண்டும். விவசாயிகள், தேனீ வளர்ப்போர் பங்கேற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு, 0427-2422550 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

