ADDED : பிப் 22, 2026 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சியில், பா.ஜ.,வின் சக்தி கேந்திரா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். பா.ஜ.,வின் வீரபாண்டி தொகுதி சக்திகேந்திரா பொறுப்பாளர் ராஜேந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், பா.ம.க., ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர், தி.மு.க., அரசை கண்டித்தும், சட்டசபை தேர்தல் குறித்தும் பேசினர்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட அரசு தகவல் தொடர்புதுறை துணை அமைப்பாளர் சின்னுராஜ், அ.தி.மு.க., நகர செயலர் சின்னதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

