/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரைப்பாலம் இருபுறமும் தடுப்பு; வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
/
தரைப்பாலம் இருபுறமும் தடுப்பு; வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
தரைப்பாலம் இருபுறமும் தடுப்பு; வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
தரைப்பாலம் இருபுறமும் தடுப்பு; வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை
ADDED : ஆக 23, 2024 05:08 AM
வீரபாண்டி: மழைக்காலங்களில் தரைப்பாலம் மூழ்குவதால், அதன் இருபு-றமும் தடுப்பு கற்கள் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்ச-ரிக்கை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முழுதும் இரு வாரங்களாக, மாலை, இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து திருமணிமுத்-தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆட்டையாம்-பட்டி அருகே இனாம் பைரோஜி புதுப்பாளையத்தில் சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்-தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அடிக்கடி வெள்-ளத்தால் மூழ்கி போக்குவரத்து தடைபட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், 5 கி.மீ., சுற்றி, ஆட்டையாம்பட்டி வழியே சென்று வரும் அவ-லமும் தொடர்கிறது.
இந்நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க, தரைப்பாலத்தின் இரு கரைகளிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிமென்ட் கற்களை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து கற்களுக்கு நேற்று வெள்ளை வண்ணம் பூசினர். மேலும், 'பாலம் பழுதடைந்-துள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்லவும்' என அறிவுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளை எச்சரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.