/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு
/
கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு
ADDED : ஏப் 03, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் அழுகிய நிலையில்வாலிபர் சடலம் மீட்பு
தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் ஊராட்சி, வடக்கு காட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன், 50. மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
இவரது விவசாய கிணற்றில் நேற்று, ஆண் சடலம் மிதப்பதாக, தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் சென்று, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்தவருக்கு, 30 முதல், 32 வயது இருக்கும். லுங்கி கிணற்றின் மேல் உள்ளது. சட்டை அணிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கிறோம்' என்றனர்.