/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு அழைப்பு
/
செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : பிப் 19, 2026 04:32 AM
சேலம்: தமிழ்நாடு, தாட்கோ நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, 'அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் - செயற்கை நுண்ணறிவு' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்-குடி இனத்தை சேர்ந்தவரின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள்ளும், 18 - 30 வயதுக்குள் உள்ளவராகவும், ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ், தகுதியுள்ள இளைஞருக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். பயிற்சியில் சேர, தாட்கோ இணையதளமான, www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி காலம், 2 மாதம். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவு செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்-படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

