ADDED : செப் 30, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், பள்ளப்பட்டி போலீசார் கடந்த 27ம் தேதி இரவு அணைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் சென்ற போது மொபட்டை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார்.
மொபட்டில் அரை கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் கஞ்சாவை கைப்பற்றி, நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு ஹவுசிங்போர்டு பகுதியில், பதுங்கி இருந்த சித்து ராஜ், 30, என்பவரை நேற்று கைது செய்தனர்.