/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி
/
பாலத்தில் கார் மோதி மளிகை கடைக்காரர் பலி
ADDED : செப் 22, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, பூனாச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. தண்ணீர்தாசனுாரில் மளிகை கடை வைத்திருந்தார்.
நேற்று கோனேரிப்பட்டியில் இருந்து தண்ணீர்தாசனுாருக்கு, 'ஜென்' காரில் மளிகை பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். மாலை, 6:40 மணிக்கு கரியானுார் பரிவு அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் கார்த்திகேயன், சம்பவ இடத்தில் பலியானார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.