sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

/

ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 05, 2024 01:49 AM

Google News

ADDED : மே 05, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், நரசோதிப்பட்டி, இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 46. 'பைபர்' கேபிள் பதிக்கும் ஒப்பந்ததாரர். இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த, சேலத்தை சேர்ந்த கிருஷ்ணன், சின்னதம்பி, விஜயா, தனசேகர் ஆகியோர், வெங்கட்ராமனிடம், சப் - கான்ட்ராக்ட் எடுத்து, கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கேபிள் பணிக்கு உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீது தயாரித்து, 4 பேரும் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து வெங்கட்ராமன், அவரது அலுவலக கணக்கை தணிக்கை செய்ததில், 2022 மே முதல், 2023 வரை, 59.90 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த பணத்தை பலமுறை கேட்டும் திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் வெங்கட்ராமன் புகார்படி, சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிருஷ்ணன் உள்பட, 4 பேர் மீது, நம்பிக்கை மோசடி, போலி பில் பயன்படுத்தியது, மோசடி, உடந்தையாக இருத்தல், கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் பேசியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us