/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம்; மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு
/
சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம்; மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு
சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம்; மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு
சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம்; மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு
ADDED : டிச 05, 2025 10:39 AM

ஓமலுார்: சாலை பணி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவா-தத்தில், முன்னாள் எம்.பி., அர்ஜூனன், மூதாட்-டியை தாக்கிய வீடியோ பரவி வருகிறது.
மேச்சேரி அருகே அரங்கனுாரை சேர்ந்தவர் சரோஜா, 65. இவரது வீடு அருகே, நேற்று முன்-தினம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்-ததாரரிடம், 'வீடு அருகே சாலை அமைத்தால் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்-ளது. சற்று தள்ளி சாலை போடுங்கள்' என, மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்ததாரர், தி.மு.க.,வின் முன்னாள் எம்.பி.,யும் அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான அர்ஜூனனிடம் தெரிவித்தார். உடனே அங்கு வந்த அர்ஜூனன், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் வாக்கு-வாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சரோஜா என்ற மூதாட்டி கன்னத்தில், 'பளார், பளார்' என அறைந்துள்ளார். இதில் மூதாட்டி மயங்கி விழுந்தார்.
தொடர்ந்து அர்ஜூ னன், சாலையில் இருந்த கட்டையை எடுத்து மக்களை தாக்க முயன்ற-போது, அங்கிருந்த சிலர் தடுத்து, காரில் அழைத்-துச்சென்றனர். இச்சம்பவ வீடியோ தற்போது பரவி வருகிறது. காயம் அடைந்த சரோஜா, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். நேற்று மதியம், மேச்சேரி போலீசார் சரோஜா-விடம் விசாரித்து, வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து பெண்ணை தாக்கியது உள்பட, 4 பிரிவுகளில், அர்ஜூனன் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

