ADDED : பிப் 22, 2024 07:19 AM
சேலம் : திருநெல்வேலி - மேலப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் - கோவை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் நாளை முதல் வரும், 28 வரை, நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் புறப்படும் ரயில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.
பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இன்று முதல் வரும், 27 வரை, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாளை முதல், பிப்., 27 வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பெங்களூருவை அடையும்.
ஈரோடு - செங்கோட்டை முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ், நாளை முதல், வரும், 27 வரை வாஞ்சி மணியாச்சி - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில், வாஞ்சி மணியாச்சியில் புறப்பட்டு ஈரோட்டை அடையும்.
நாளை தாதரில் புறப்பட்டு நெல்லையை அடையும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கம், மதுரை - நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் வரும், 28ல் நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கிளம்பும்.
நாளை, ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - நெல்லை வார எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி - நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. வரும், 24ல் தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ், விருதுநகர் - நெல்லை இடையே ரத்து செய்யப்படும். மறுமார்க்கத்தில் வரும், 26ல் நெல்லையில் புறப்பட வேண்டிய தாதர் எக்ஸ்பிரஸ், விருதுநகரில் புறப்படும்.
வரும், 25ல் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.