நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழா கடந்த, 15ல் தங்க கவசம் சாற்றுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, திரு-ஊஞ்சல், சக்தி கரகம், அம்பாள் ரதம் ஏறுதல் ஆகியவை நடந்-தது. நேற்று தேரோட்டம் தொடங்கியது. கோவில் சன்னதி முன்பிருந்த தேர் அலங்கரிக்கப்பட்டு, தேர் நிலை பெயர்தல் நடந்-தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது துாரம் சென்றதும், தேரை நிறுத்தினர். இத்தேர், நாளை மறுநாள் நிலையை அடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாதேஸ்வரன், பரம்பரை அறங்காவலர், பூசாரிகள் மேற்கொண்டனர்.

