ADDED : மே 07, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: தலைவாசல், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் வீரமணி, 58. ஊராட்சி துாய்மை பணியாளராக இருந்தார். அதே பகுதியில் உள்ள வீரனார் கோவிலில் பூசாரியாகவும் இருந்தார். நேற்று, கோவிலில் பூஜை செய்ய சென்ற அவர், அங்குள்ள மின் கம்பியை தொட்-டுள்ளார்.
இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்-கின்றனர்.
