/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்
/
எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்
எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்
எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்
ADDED : மார் 20, 2025 02:50 AM
சேலம்:கோவை - திருப்பதி ரயில் பெட்டிகள், பயணியர் சவுகரியத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்.ெஹச்.பி., பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை, 6:10க்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே மதியம், 1:35க்கு திருப்பதியை அடையும். மறுமார்க்க ரயில், திங்கள், புதன், வியாழன், சனி கிழமைகளில் மதியம், 2:55க்கு கிளம்பி, இரவு, 8:50க்கு கோவையை அடையும்.
இந்த ரயில்களில் 'ஏசி' சேர் கார் - 1, இரண்டாம் வகுப்பு சேர் கார் - 9, பொதுப்பெட்டி - 8 என, அனைத்து பெட்டிகளும் இன்று முதல், புது நவீன தொழில்நுட்பமான, எல்.ஹெச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் அதிர்வுகள் குறைவாக இருப்பதோடு, இலகுவான, 'பிரேக்கிங் சிஸ்டம்' ஆகியவை பயணியர் சவுகரியத்தை அதிகரிக்கும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.