ADDED : ஆக 04, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
சேலம்;சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நந்தினி, 19, சேலத்தில் தனியார் கல்லுாரியில் பி.ஏ., இறுதி-யாண்டு படித்து வருகிறார்.
கடந்த மாதம், 31ல் காலை வீட்டில் இருந்து கல்-லுாரிக்கு சென்ற அவர், மாலையில் வீடு திரும்ப-வில்லை, உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை. சூரமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் ரமேஷ் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
