sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ராஜகோபுர கருங்கல் சுவர் வெட்டி எடுத்தவர் மீது புகார்

/

ராஜகோபுர கருங்கல் சுவர் வெட்டி எடுத்தவர் மீது புகார்

ராஜகோபுர கருங்கல் சுவர் வெட்டி எடுத்தவர் மீது புகார்

ராஜகோபுர கருங்கல் சுவர் வெட்டி எடுத்தவர் மீது புகார்


ADDED : டிச 28, 2025 09:21 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், 2ம் அக்ரஹாரத்தில், இந்து சமய அறநி-லையத்துறை நிர்வாகத்தில் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உள்ளது. அதன் நுழைவாயில் ராஜகோபுர கருங்கல் சுவரில் உள்ள சங்கு சிற்ப கீழ் பகுதியில், முதல்வர், அமைச்சர், அறங்காவ-லர்கள் பெயருடன், 3 அடிக்கு, 3 அடியில் சதுர கல்வெட்டு பதிக்க, 'டிரில்லிங்' இயந்திரம் மூலம், பழமையான கருங்கல் சுவரை வெட்டி எடுத்துள்-ளனர்.

இதை அறிந்து, அங்கு வந்த, சேலம் திருத்-தொண்டர் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.,வின் சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர தலைவர் சசிகுமார், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், சுவரை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி, 'இதை செய்ய யார் அனுமதி அளித்தனர்' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், 'அறங்காவலர் குழுவினர் தான் வெட்டி எடுக்க சொன்னார்கள்' என தெரிவித்தனர். உடனே, டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். தொடர்ந்து அவர்கள் வந்ததும், இரு தொழி-லாளர்களை ஒப்படைத்தனர். பின், 'ராஜகோபுர கருங்கல் சுவரை வெட்டி எடுத்தவர்கள், அதை செய்ய சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்தனர்.






      Dinamalar
      Follow us