sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க., - மா.செ., மீது முன்னாள் நிர்வாகி புகார்

/

அ.தி.மு.க., - மா.செ., மீது முன்னாள் நிர்வாகி புகார்

அ.தி.மு.க., - மா.செ., மீது முன்னாள் நிர்வாகி புகார்

அ.தி.மு.க., - மா.செ., மீது முன்னாள் நிர்வாகி புகார்


ADDED : பிப் 19, 2024 12:43 PM

Google News

ADDED : பிப் 19, 2024 12:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர், 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் ஒன்றிய செயலர் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் ராஜூ, 60; அ.தி.மு.க., சேலம் மேற்கு ஒன்றிய செயலராக இருந்தார். நேற்று முன்தினம் அவரை, கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி, பொது செயலர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.இதையடுத்து ராஜூ, சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. இ.பி.எஸ்., பால் பண்ணை தலைவராக இருந்தபோது, நான் இயக்குனராக இருந்ததால் அவர் செய்த ஊழல் அனைத்தும் தெரியும். 300 சதுர அடி சொத்து வைத்திருந்த, சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், தற்போது பல கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து, அ.தி.மு.க.,வை ஏமாற்றி வருகிறார். என்னிடமும் வெங்கடாஜலம், 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, இ.பி.எஸ்.,சிடம், 2022 முதல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சாட்டு குறித்து வெங்கடாஜலம் கூறுகையில், ''கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜூ, என் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டு, 100 சதவீதம் உண்மைக்கு புறம்பானது. என்னிடம் பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us