sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'சிவ சிவ' கோஷம் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை

/

'சிவ சிவ' கோஷம் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை

'சிவ சிவ' கோஷம் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை

'சிவ சிவ' கோஷம் முழங்க கொடிமரம் பிரதிஷ்டை


ADDED : நவ 15, 2024 07:11 AM

Google News

ADDED : நவ 15, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில் திரளான பக்தர்களின், 'சிவ சிவ' கோஷம் முழங்க, கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் மூலவர் பெரியநாயகி அம்மன், கரபுரநாதரரை தவிர ராஜகோபுரம், மற்ற பரிவார தெய்வங்களுக்கு, 2022 ஆக., 22ல் பாலாலயம் செய்து கும்பாபி ேஷக திருப்பணி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, உபயதாரரால், 15 அடி உயரத்தில், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கொடி மரம் செய்து, நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்படும் இடத்துக்கு எடுத்து வரப்பட்டது.

நேற்று காலை அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா, தக்கார் விமலா, ஆய்வர் பத்மாவதி, செயல் அலுவலர் சோழமாதேவி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட உபயதாரர்கள், திரளான பக்தர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள், கொடி மரத்துக்கு அபி ேஷகம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர் மாலைகள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்தனர். பின் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நவரத்தினங்கள், ஸ்ரீசக்கரம் வரையப்பட்ட செம்பு தகடு உள்ளிட்டவைகளை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். காலை, 10:50 மணிக்கு பக்தர்களின், 'சிவ சிவ' கோஷம் முழங்க கொடி மரம் பிரதிஷ்டை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us