ADDED : செப் 04, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; காடையாம்பட்டி, நடுவீதியை சேர்ந்தவர் சேகர், 45. 'வெல்டிங்' தொழிலாளியான இவர் சேத்துப்பா-தையில் உள்ள அவரது இடத்தில், பட்டறை அமைக்க ெஷட் அமைக்கும் பணி மேற்கொள்-கிறார்.
அங்கு நேற்று காலை ஒருவர், பிளாஸ்டிக் பேரல், 50 மீ., காப்பர் ஒயர் என, 8,000 ரூபாய் மதிப்பில் பொருட்களை திருடிச்சென்றார்.அப்போது அருகே உள்ளவர்கள் உதவியுடன், அந்த வாலிபரை சேகர் பிடித்து தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசார-ணையில், நாச்சனம்பட்டியை சேர்ந்த சீனிவாசன், 31, என தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
