ADDED : பிப் 06, 2026 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, சந்தன நல்லுாரை சேர்ந்-தவர் சோமசுந்தரம், 66, கட்டட மேஸ்திரி. இவர், திருமகள் பைபாஸ் அருகில் தனியார் மருத்துவமனை கட்டும் பணியில், அங்கேயே தங்கி ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று காலை குளிப்பதற்காக, பாத்ரூம் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட-தாக, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பசோதனைக்கு அனுப்பி வைத்த சூரமங்கலம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

