ADDED : ஜூலை 04, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த, 17 வயது மாணவி, கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்-கிறார். கடந்த மாதம், 30ல் மாயமானார். அவரது தாய் புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் விசாரித்ததில், மாணவி அரக்கோணத்தில் இருப்-பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், மாண-வியை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:'இன்ஸ்டாகிராம்' மூலம், அரக்கோணத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, மாணவி காதலித்துள்ளார். இதை தாய் கண்டிக்கவே, அந்த வாலிபர், மாணவியை அரக்கோணம் அழைத்துச்-சென்று குடும்பம் நடத்தியுள்ளார். அவர், சோழிங்-கரில் சமையல் மாஸ்டராக பணிபுரிகிறார். போலீசார் வருவதை அறிந்து, அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வரு-கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
