தனிப்பயன் காசோலை புத்தகம் அஞ்சல் துறையில் அறிமுகம்
தனிப்பயன் காசோலை புத்தகம் அஞ்சல் துறையில் அறிமுகம்
ADDED : மே 23, 2026 04:33 AM
சேலம்; அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்க-ளுக்கு தனிப்பயன் காசோலை புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் அறிக்கை:அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்க-ளுக்கு, புது தனிப்பயன் காசோலை புத்தக வசதி, கடந்த, 8ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கணக்கு
தாரரின் பெயர், கணக்கு எண், அஞ்சல் துறையின் ஐ.எப்.எஸ்.சி., குறியீடு முன்கூட்டியே அச்சிடப்-பட்டிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்ப-தோடு வாடிக்கையாளர்
களுக்கு வங்கி தரத்தில் சேவை கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் விருப்பப்படி உடனடி காசோலை புத்தகம் மற்றும் தனிப்பயன் காசோலை புத்தகம் ஆகிய ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
தனிப்பயன் காசோலை புத்தகம், இலவசமாக கணக்குதாரரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
இச்சேவையை அஞ்சலகத்தில் நேரடியாக விண்-ணப்பித்து பெறலாம். விபரங்களுக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.
