sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்

/

சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்

சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்

சாலை இணையும் இடத்தில் இருளால் விபத்து அபாயம்


ADDED : டிச 22, 2024 12:47 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, டிச. 22-

சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. பிரதான சாலை மூடப்பட்டு, சர்வீஸ் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

ஆனால் சர்வீஸ் சாலையில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது. மல்லுார் பிரிவு அருகே பனமரத்துப்பட்டியில் இருந்து வரும் சாலை, சேலம் - நாமக்கல் சாலையில் இணைகிறது. அங்கும் இரவில் இருள் சூழ்ந்துள்ளது.

பனமரத்துப்பட்டி சாலையில் வரும் வாகனங்கள், நெடுஞ்சாலையில் நுழைகின்றன.

அப்போது, நெடுஞ்சாலையில் நேராக, வேகமாக வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இருள் சூழ்ந்துள்ளதால் நெடுஞ்சாலையில் நேராக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, பக்கவாட்டில் பனமரத்துப்பட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் குறித்து தெரிவதில்லை.

இதனால் விபத்து ஏற்படுகிறது. இருள் சூழ்ந்த சாலை சந்திப்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர்.

இதனால் நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி சாலை இணையும் இடத்தில் மின் விளக்குகள் பொருத்த, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us