/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணிக்கு இடையூறு நா.த.க., நிர்வாகி கைது
/
துாய்மை பணிக்கு இடையூறு நா.த.க., நிர்வாகி கைது
ADDED : பிப் 17, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த துாய்மை பணியாளர் கலா, 40. அதே பகுதியில் நேற்று காலை, 8:00 மணிக்கு துாய்மை பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து சேகரித்த குப்பையை, சுடுகாடு பகுதியில் வழக்-கம்போல் கொட்ட முயன்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அண்ணாமலை, 50, தகராறில் ஈடுபட்டு பணிபுரிய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து கலா புகார்படி, காரிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.

