sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஆக 15, 2025 03:41 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று தீ மிதி விழா நடந்தது.

அதில் பருவராஜகுல உறவினர் முறையாரின் மேட்டுமாரியம்மன் கோவிலில், பக்தர்கள் தீ மிதித்தனர்.

அலகு குத்தியும், எலுமிச்சை பழங்களை உடல் முழுதும் குத்தி வந்தும், பெண்கள் சிலர், குழந்தைகளுடன் வந்தும் தீ மிதித்தனர். 3 மணி நேரத்துக்கு மேல், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேட்டுமாரியம்மன் சுவாமி, தங்க கவசத்தில் ஜொலித்தார். அதேபோல், க.புதுார் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

அதேபோல் ஆத்துார், கல்லாநத்தம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us